
சரியான ஷாம்பூவை பயன்படுத்துதல்
பொடுகை கையாள்வதற்கான முதல் கட்ட நடவடிக்கையே, நீங்கள் பயன்படுத்தி வரும் ஷாம்பூவை சோதிப்பதுதான். நாங்கள் பரிந்துரைப்பது க்ளியர் கம்ப்ளீட் ஆக்டிவ் கேர் ஆன்டி&டேண்டிரஃப் ஷாம்பூ. செயல்திறனுள்ள நியூட்ரியம் ஆயில் காம்ப்ளக்ஸ் ஃபார்முலேஷன் கொண்டுள்ள இது, தலையின் மேல்தோல் மற்றும் முடி பிளவுபடுவதில் இருந்து பாதுகாக்கிறது, அதோடு எண்ணெய்பசையை குறைக்கிறது.

எலுமிச்சை
எலுமிச்சை பழத்தில் பாதி வெட்டி எடுத்து அதன் சாற்றை உங்கள் தலையின் மேல்தோல் முழுவதும் தடவி முடியை ஈரப்படுத்தவும், சுமார் 5 நிமிடங்களுக்கு அப்படியே விடவும். அதன் பிறகு முடியை அலசவும். அடுத்த ஒரு சில மாதங்களுக்கு வாரத்துக்கு இரு தடவை என இதனை திரும்ப திரும்ப செய்து வரவும்.

வேம்பு
அரை கப் தண்ணீரில் 4 வேப்ப இலைகளை கொதிக்க விடவும். அதனை இரவில் அப்படியே வைத்து விடவும். அதன் பிறகு வேம்பு தண்ணீரால் உங்கள் தலைமுடியை அலசவும். இந்த செயலுக்கு பிறகு உங்களின் வழக்கமான ஷாம்பூவை நீங்கள் பயன்படுத்த முடியும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் என இதனை செய்து வரவும்.
Written by Team BB on 19th Jan 2017